கோவை: சௌரிபாளையம் பகுதியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: சௌரிபாளையம் பகுதியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் கிராமசபைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செளரிபாளையம் அருகே இந்திரா நகரில் கிராமசபைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என தி.மு.க தரப்பில் கூறப்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையின் தடையை மீறி மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபைக் கூட்டம் துவங்கப்பட்டது.

இதை காவல்துறையினர் தடுத்ததால் அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ, பகுதி பொறுப்பாளர் சேரலாதன், வார்டு செயலாளர் சுரேஷ், மணிகண்டன் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் கிராமசபைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செளரிபாளையம் அருகே இந்திரா நகரில் கிராமசபைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என தி.மு.க தரப்பில் கூறப்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையின் தடையை மீறி மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபைக் கூட்டம் துவங்கப்பட்டது.
இதை காவல்துறையினர் தடுத்ததால் அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ, பகுதி பொறுப்பாளர் சேரலாதன், வார்டு செயலாளர் சுரேஷ், மணிகண்டன் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.