தொடர் விடுமுறையால் வால்பாறை களைகட்டியது: போக்குவரத்து நெரிசல்!

கோவை: தொடர் விடுமுறையால் சுற்றுலாத்தலமான வால்பாறை களை கட்டியது.


கோவை: தொடர் விடுமுறையால் சுற்றுலாத்தலமான வால்பாறை களை கட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளதால் எந்த காலத்திலும் சீதோஷ்ண நிலை ஒரே சீராக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்துள்ளனர்.



சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை ஆகிய பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆற்றில் குளித்தும் தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இதன்காரணமாக வால்பாறையில் ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரானா தொற்று காரணமாக கடந்த ஆறு மாத காலமாக வியாபாரத்தை இழந்திருந்த வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...