கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்!

கோவை: கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள சாய் நகர், சத்ய நாராயண நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட மூன்று நகரின் மையப் பகுதியில் 65 சென்ட் Reserved site இடம் உள்ளது. இந்த இடம் குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்கா அமைப்பதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.



இந்நிலையில், திடீரென்று கோவை மாநகராட்சி இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரண்டு முறை பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர்.

இந்த நிலையில், இன்று கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட மாநகராட்சி அதிகாரிகள் வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.



இதனை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் போத்தனூர் காவல் துறையினர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.



மேலும், அங்கு திரண்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்றவர்கள், மாநகராட்சி ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் கூறி தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...