கோவை: காதலனை மறக்க அவகாசம் கேட்ட இளம்பெண் மாயமானார். இதையடுத்து பெண்ணை மீட்ட போலீசார் அவருக்கு அறிவுரைகூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: காதலனை மறக்க அவகாசம் கேட்ட இளம்பெண் மாயமானார். இதையடுத்து பெண்ணை மீட்ட போலீசார் அவருக்கு அறிவுரைகூறி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருப்பூரில் வேலைபார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். பல்வேறு இடங்களுக்குச் சென்று சந்தித்துக்கொண்ட அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைக்கலாம் என மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். ஆனால் அந்தப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார். எனவே அவருக்கு பெற்றோர் அறிவுரை கூறினர்.
இதையடுத்து அந்தப் பெண் காதலனை மறக்க சில நாட்கள் அவகாசம் கேட்டார். இந்நிலையில் இளம்பெண் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் திருப்பூரில் உள்ள தோழி வீட்டில் இருப்பதாக கூறினார். உடனே அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரைகூறி பெற்றோரிடம் அனுப்பிவைத்தனர்.
கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருப்பூரில் வேலைபார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். பல்வேறு இடங்களுக்குச் சென்று சந்தித்துக்கொண்ட அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைக்கலாம் என மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். ஆனால் அந்தப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார். எனவே அவருக்கு பெற்றோர் அறிவுரை கூறினர்.
இதையடுத்து அந்தப் பெண் காதலனை மறக்க சில நாட்கள் அவகாசம் கேட்டார். இந்நிலையில் இளம்பெண் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் திருப்பூரில் உள்ள தோழி வீட்டில் இருப்பதாக கூறினார். உடனே அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரைகூறி பெற்றோரிடம் அனுப்பிவைத்தனர்.