கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை கரும்புக்கடை சோதனைச்சாவடி அருகே 17 வயது சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வரும் ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். இந்தக் காட்சி அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போனை பறிகொடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த இர்சாத் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்போன் பறித்துச் சென்ற ஆசாமிகள்மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை கரும்புக்கடை சோதனைச்சாவடி அருகே 17 வயது சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வரும் ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். இந்தக் காட்சி அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போனை பறிகொடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த இர்சாத் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்போன் பறித்துச் சென்ற ஆசாமிகள்மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.