திருப்பூர்: திருப்பூரில் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகேயுள்ள தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் படுத்துக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் சேவூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்து, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, சிறுமி விட்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு கடுமையான காயங்கள் உள்ளன. வசதியான வீட்டு குழந்தை போல் ஆடைகள், காலணி அணிந்துள்ளார். அவரை யாரும் கடத்தி வந்தனரா, வேறு காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை.
முதற்கட்டமாக குப்பைக் கிடங்கு அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றின் பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி மற்றும் முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியில் சாலையில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பெண்ணை இருவர் காரில் ஏற்றிச் சென்றதாகவும் பொதுமக்களில் சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் யார், சிறுமி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களை சேகரிக்க பிற காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகேயுள்ள தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் படுத்துக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் சேவூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்து, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, சிறுமி விட்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு கடுமையான காயங்கள் உள்ளன. வசதியான வீட்டு குழந்தை போல் ஆடைகள், காலணி அணிந்துள்ளார். அவரை யாரும் கடத்தி வந்தனரா, வேறு காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை.
முதற்கட்டமாக குப்பைக் கிடங்கு அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றின் பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி மற்றும் முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியில் சாலையில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பெண்ணை இருவர் காரில் ஏற்றிச் சென்றதாகவும் பொதுமக்களில் சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் யார், சிறுமி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களை சேகரிக்க பிற காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.