திருப்பூரில் மயக்க நிலையில் 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண்..! பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்!

திருப்பூர்: திருப்பூரில் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட 7 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகேயுள்ள தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தலை மற்றும் உடலில் காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் படுத்துக் கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் சேவூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, முதலுதவி சிகிச்சை அளித்து, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, சிறுமி விட்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு கடுமையான காயங்கள் உள்ளன. வசதியான வீட்டு குழந்தை போல் ஆடைகள், காலணி அணிந்துள்ளார். அவரை யாரும் கடத்தி வந்தனரா, வேறு காரணங்கள் உள்ளதா என்பது தெரியவில்லை.

முதற்கட்டமாக குப்பைக் கிடங்கு அருகேயுள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றின் பதிவை ஆய்வு செய்ததில், கண்ணாடி மற்றும் முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியில் சாலையில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண்ணை இருவர் காரில் ஏற்றிச் சென்றதாகவும் பொதுமக்களில் சிலர் தெரிவிக்கின்றனர். அவர்கள் யார், சிறுமி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்களை சேகரிக்க பிற காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...