கோவை கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது; ஓட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியீடு

கோவை: கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க கூடிய மூன்று மாணவர்கள் குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க கூடிய மூன்று மாணவர்கள் குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள நரசிபுரம் பகுதியில் உள்ள ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மூன்றும்மாணவர்கள், மது போதையில் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். அங்கே சென்ற இவர்கள் கடை ஊழியரிடம் ஆம்பிலேட் கேட்டனர். அப்போது இவர்கள் ஒரு ஆம்பலைட்டுக்கு மூன்று இலைகள் கேட்டதாக தெரிகிறது. கடை ஊழியர்கள் ஒரு ஆம்லெடுக்கு எதற்கு மூன்று இலைகள் என கூறி கொடுக்க மறுத்துள்ளனர்.



இதனால், கோபம் அடைந்த மாணவர்கள் கடை ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி சரமாரியாக தாக்கினர். உங்க கடை ஓனர் எங்கடா, நாங்க இந்த ரங்கநாதர் இன்ஜினியரிங் காலேஜ்ல தான் படிக்கிறோம். எவ்வளவு தடவை இந்த கடைக்கு வந்திருக்கோம். எங்களை தெரியாதா? என ஒரு மாணவன் சொல்ல, மற்றொரு மாணவர் இந்தத் தாக்குதல் காட்சியை வீடியோ எடுத்தார். சரமாரியாக தாக்க பட்ட ஓட்டல் ஊழியர்கள் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.

இந்நிலையில், அந்த மாணவர்கள் இந்த தாக்குதல் வீடியோவிற்கு பாட்டு போட்டு மீம்ஸ் செய்து அதை யூடியூபில், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் இந்தத் தாக்குதல் வைரலானது. ஓட்டல் பெயருடன் வீடியோ வந்ததை பார்த்து பதறிப்போன கடை உரிமையாளர், நேற்று ஊழியர்களை அழைத்து விவரம் கேட்டபோது அவர்கள், ஆமா, அந்த மாணவர்கள் வந்தாங்க, தூக்கிப் போட்டு அடிச்சிட்டு போய்ட்டாங்க, என்றனர். இதை கேட்ட அந்த ஓட்டல் உரிமையாளர், ஆலாந்துரை போலீசில் புகார் அளித்தார்.

ஆலாந்துரை போலீசார் வீடியோ பதிவுகளை பார்த்து விட்டு தாக்குதல் நடத்திய மாணவர்கள் பிரவீன் (19), விக்னேஷ் (20), ரமேஷ் (20), ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இந்து அமைப்பிலும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...