மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு!

கோவை: கோவையில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் இ.பி காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி தீபா (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அதே பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர். தீபாவின் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்த அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் திருடர்கள் மாயமாய் மறைந்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் தீபா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...