கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம வாலிபர் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்று உள்ளார்.
அப்போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் மூலம் வங்கி மேலாளருக்கு தகவல் சென்றது. உடனே வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சியை வைத்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வங்கி அதிகாரிகள் தகவல் அளித்தனர். போலீசார் அந்த புகைப்படத்தை கொண்டு மர்ம வாலிபரை தேடி வந்தனர்.
அப்போது, கருமத்தம்பட்டி 4 ரோடு சந்திப்பில் சந்தேகத்திற்குரிய வாலிபர் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த மர்ம வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சர்ஜன் பாஸ்வான் (24) என்பதும், பீகார் மாநிலம் சித்தமாகி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2 மாதங்களாக கருமத்தம்பட்டி அடுத்த காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உணவகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
மேலும், மது போதையில் இருந்த சர்ஜன் பாஸ்வான் கையில் பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் இன்று மாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.
கோவை கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம வாலிபர் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்று உள்ளார்.
அப்போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் மூலம் வங்கி மேலாளருக்கு தகவல் சென்றது. உடனே வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சியை வைத்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வங்கி அதிகாரிகள் தகவல் அளித்தனர். போலீசார் அந்த புகைப்படத்தை கொண்டு மர்ம வாலிபரை தேடி வந்தனர்.
அப்போது, கருமத்தம்பட்டி 4 ரோடு சந்திப்பில் சந்தேகத்திற்குரிய வாலிபர் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த மர்ம வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சர்ஜன் பாஸ்வான் (24) என்பதும், பீகார் மாநிலம் சித்தமாகி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2 மாதங்களாக கருமத்தம்பட்டி அடுத்த காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உணவகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
மேலும், மது போதையில் இருந்த சர்ஜன் பாஸ்வான் கையில் பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் இன்று மாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.