சந்தன மரக்கட்டையுடன் சுற்றிய வாலிபரிடம் விசாரணை!

கோவை: கோவை காந்திபுரம் காட்டூர் போலீசார் நேற்று நள்ளிரவு காந்திபுரம் பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றனர்.


கோவை: கோவை காந்திபுரம் காட்டூர் போலீசார் நேற்று நள்ளிரவு காந்திபுரம் பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரைப் பார்த்த போலீசார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரது கைப்பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர்மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தர்மபுரியைச் சேர்ந்த மாது (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பதாகவும், அங்கு வளர்க்கப்பட்ட சந்தன மரத்தை வெட்டியபோது கிடைத்த சந்தன மரக் கட்டைகளை எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அவர் கூறியது உண்மைதானா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...