வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார்: அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு!

திருப்பூர்: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார் என்று அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.


திருப்பூர்: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார் என்று அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்தொழுவு, பொல்லிக்காளிபாளையம், கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று மூன்று இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளிக்கை தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், `வருகிற 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வார்' என்றார். அப்போது, 'வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத்தான் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுகிறதா' என அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் எல்லா வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது போலவே இந்த வருடமும் வழங்கப்படுகிறது' என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...