வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார்: அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு!

திருப்பூர்: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார் என்று அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.


திருப்பூர்: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெறுவார் என்று அம்மா கிளினிக் தொடக்க விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்தொழுவு, பொல்லிக்காளிபாளையம், கணபதிபாளையம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று மூன்று இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளிக்கை தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், `வருகிற 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வார்' என்றார். அப்போது, 'வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத்தான் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுகிறதா' என அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் எல்லா வருடமும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது போலவே இந்த வருடமும் வழங்கப்படுகிறது' என்றார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...