ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. Omega Eco Products India Private Limited நிறுவனர் Dr. Joshi V. Cherian மாணவிகளிடம் தொழில்நுட்ப திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் பயன்பாட்டுக் கல்வியாக மாற்றவும் அறிவுறுத்தினார்.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் Omega Eco Products India Private Limited நிறுவனத்தின் நிறுவனரும் Managing Director-ம் ஆன Dr. Joshi V. Cherian முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய Dr. Joshi V. Cherian, மாணவிகள் தங்களுடைய துறை சார்ந்த அறிவையும் தொழில்நுட்பத் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதோடு அவற்றைப் பயன்பாட்டுக் கல்வியாக மாற்றவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கற்ற கல்வியை வெறும் செய்திகளாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவற்றைப் பயன்மிக்கதாக மாற்றும்போது சமூக முன்னேற்றத்திற்குத் துணைநிற்க முடியும் என்றார்.

நம் தேசத்தைக் கட்டமைக்கப் போகும் மாணவிகள்தான் எதிர்கால இந்தியாவின் அஸ்திவாரம் எனக் குறிப்பிட்ட அவர், மாணவிகள் தங்களுடைய அறிவையும் திறமைகளையும் ஆழமாக வளர்த்துக் கொள்வது அவர்களுக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், S.N.R. Sons அறக்கட்டளையின் Chief Executive Officer-யும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் செயலருமான C.V. Ramkumar கலந்துகொண்டு உரையாற்றினார். உலகளாவிய அளவில் வேலைவாய்ப்புக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும் தத்தம் துறையில் மேம்படவும் மாணவிகளை அவர் வாழ்த்தினார்.

கல்லூரி முதல்வர் Dr. K. Chitra இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசினார். மாணவிகள் தங்களுடைய துறை சார்ந்த அறிவு, புதுமை, ஆய்வு உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து கற்பதில் விருப்பம் உடையவர்களாகவும் தங்களின் அறிவாற்றலைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆர்வம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

புதுமைக் கண்டுபிடிப்புகளின் வாயிலாக சமூகத்திற்குப் பயன்படக்கூடிய ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்வைப்பதன் மூலமாகத் தங்களை அவர்கள் மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டு மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், முதுநிலை மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஒருங்கிணைப்பு விழாவானது, புதிய கல்வி ஆண்டில் முதுநிலை படிப்பை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...