கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் நீரேற்று திட்டப்பணிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார்

கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், செட்டிபாளையம் காடு குட்டையில் நிலத்தடி நீரை செரிவூட்ட, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் காடு குட்டைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, பொதுப்பணிதுறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை இணைந்து அப்பணிகளை துவக்க உள்ளனர். இதற்காக, கோவை ரூ.4.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.



இந்நிலையில், இந்த காடு குட்டை நிலத்தடிநீர் செரிவூட்டும் திட்டப்பணிக்கான, பூமி பூஜையை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், மதுக்கரை பேரூராட்சி கழகச்செயலாளர் சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் சதீஸ்குமார், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...