கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், செட்டிபாளையம் காடு குட்டையில் நிலத்தடி நீரை செரிவூட்ட, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் காடு குட்டைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, பொதுப்பணிதுறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை இணைந்து அப்பணிகளை துவக்க உள்ளனர். இதற்காக, கோவை ரூ.4.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த காடு குட்டை நிலத்தடிநீர் செரிவூட்டும் திட்டப்பணிக்கான, பூமி பூஜையை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், மதுக்கரை பேரூராட்சி கழகச்செயலாளர் சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் சதீஸ்குமார், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், செட்டிபாளையம் காடு குட்டையில் நிலத்தடி நீரை செரிவூட்ட, ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் காடு குட்டைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, பொதுப்பணிதுறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை இணைந்து அப்பணிகளை துவக்க உள்ளனர். இதற்காக, கோவை ரூ.4.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த காடு குட்டை நிலத்தடிநீர் செரிவூட்டும் திட்டப்பணிக்கான, பூமி பூஜையை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், மதுக்கரை பேரூராட்சி கழகச்செயலாளர் சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் சதீஸ்குமார், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.