நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய கரடி..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உலா வந்த கரடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உலா வந்த கரடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை, அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் உள்ள பஜார் பகுதி, போலீஸ் கேம்ப், குடியிருப்பு பகுதி உள்ளிட்டப் பகுதியில் கடந்த சில நாட்களாக, ஒரு ஒற்றைக் கரடி சுற்றி வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உலா வந்த கரடியால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வந்த நிலையில், அங்கே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அந்த கரடி மனிதர்களை தாக்கும் முன், அதை கூண்டு அமைத்து, பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...