நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உலா வந்த கரடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் உலா வந்த கரடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அதை சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை, அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் உள்ள பஜார் பகுதி, போலீஸ் கேம்ப், குடியிருப்பு பகுதி உள்ளிட்டப் பகுதியில் கடந்த சில நாட்களாக, ஒரு ஒற்றைக் கரடி சுற்றி வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உலா வந்த கரடியால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வந்த நிலையில், அங்கே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அந்த கரடி மனிதர்களை தாக்கும் முன், அதை கூண்டு அமைத்து, பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை, அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் உள்ள பஜார் பகுதி, போலீஸ் கேம்ப், குடியிருப்பு பகுதி உள்ளிட்டப் பகுதியில் கடந்த சில நாட்களாக, ஒரு ஒற்றைக் கரடி சுற்றி வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உலா வந்த கரடியால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வந்த நிலையில், அங்கே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி, அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அந்த கரடி மனிதர்களை தாக்கும் முன், அதை கூண்டு அமைத்து, பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.