எட்டு மாதங்களுக்குப் பின், பொள்ளாச்சி பகுதியில் களைகட்டியது ரேக்ளா பந்தயம்..! சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு மக்கள் ஆரவாரம்

பொள்ளாச்சி: பாரம்பரிய வீர விளையாட்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்களை வீர விளையாட்டாக கருதி நடத்தி வருகின்றனர்.


பொள்ளாச்சி: பாரம்பரிய வீர விளையாட்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்களை வீர விளையாட்டாக கருதி நடத்தி வருகின்றனர்.

தாங்கள் வைத்திருக்கும் காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையிலும், பாரம்பரிய காளை இனங்களை பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக ரேக்ளா பந்தயங்கள் நடைபெறவில்லை.

தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டல விவசாயிகளின் நண்பனாக விளங்குகின்ற காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் ரேக்ளா பந்தயம் களைகட்டியுள்ளது.



இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், மணல்மேடு பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் காளைகள் பங்கேற்றன. இரண்டு பல் காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும், 4 பல் காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் போட்டி நிர்ணயிக்கப்பட்டது. தூரத்தை கடக்க துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த காளைகளை, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும், போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது, துன்புறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போட்டி நடத்தப்பட்டன. கொங்கு மண்டல விவசாயிகள் ரேக்ளா பந்தயங்களை பாரம்பரியமாக நடத்தி வருவதால், இந்த போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...