எட்டு மாதங்களுக்குப் பின், பொள்ளாச்சி பகுதியில் களைகட்டியது ரேக்ளா பந்தயம்..! சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு மக்கள் ஆரவாரம்

பொள்ளாச்சி: பாரம்பரிய வீர விளையாட்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்களை வீர விளையாட்டாக கருதி நடத்தி வருகின்றனர்.


பொள்ளாச்சி: பாரம்பரிய வீர விளையாட்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தயங்களை வீர விளையாட்டாக கருதி நடத்தி வருகின்றனர்.

தாங்கள் வைத்திருக்கும் காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையிலும், பாரம்பரிய காளை இனங்களை பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக ரேக்ளா பந்தயங்கள் நடைபெறவில்லை.

தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கொங்கு மண்டல விவசாயிகளின் நண்பனாக விளங்குகின்ற காங்கேயம் காளைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் ரேக்ளா பந்தயம் களைகட்டியுள்ளது.



இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர், மணல்மேடு பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் காளைகள் பங்கேற்றன. இரண்டு பல் காளைகளுக்கு 200 மீட்டர் தூரமும், 4 பல் காளைகளுக்கு 300 மீட்டர் தூரமும் போட்டி நிர்ணயிக்கப்பட்டது. தூரத்தை கடக்க துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த காளைகளை, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

மேலும், போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது, துன்புறுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போட்டி நடத்தப்பட்டன. கொங்கு மண்டல விவசாயிகள் ரேக்ளா பந்தயங்களை பாரம்பரியமாக நடத்தி வருவதால், இந்த போட்டிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...