கோவை: கோவை மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்துவிலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
கோவை: கோவை மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்துவிலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி ஆகியோர் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் கே.என் ஜவஹர் தலைமையில் ஏராளமான த.மா.கா நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா இளைஞரணித் தலைவர் ஜே.எஸ்.சரத், கவுண்டம்பாளையம் பகுதி தலைவர் லோகநாதன், குறிச்சி பகுதி தலைவர் குறிச்சி அசோக் மற்றும் கணபதி பகுதி தலைவர் முரளி, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் கோவை நவாப் லால், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் தங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விடுவித்துக்கொண்டு தி.மு.க.வில் இணைந்தனர்.
விரைவில் கவுண்டம்பாளைத்தில் 2 ஆயிரம் பேருடன் தி.மு.க.வில் இணையும் மிக பிரம்மாண்டமான விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.