கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் இணைந்து வரும் 21ம் தேதியன்று திங்கள் மாலையில் வியாழன் மற்றும் சனி கோள்கள் நேர்கோட்டில் சந்திக்கும் அற்புத வான்நோக்கு நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் கோவை மண்டல அறிவியல் மையம் இணைந்து வரும் 21ம் தேதியன்று திங்கள் மாலையில் வியாழன் மற்றும் சனி கோள்கள் நேர்கோட்டில் சந்திக்கும் அற்புத வான்நோக்கு நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் மெகபுனிஷா, மாநில வெளியீட்டு இணை ஒருங்கிணைப்பாளர் முஹமது பாதுஷா,மாநில வானியல் கருத்தாளர் ரமேஷ் மாவட்டத் தலைவர் ரிஷி சரவணன், மாவட்ட செயலாளர் ஶ்ரீராமகிருஷ்ணன் மற்றும் கோவை மண்டல அறிவியல் மைய மண்டல அறிவியல் அலுவலர் பழனிச்சாமி, கற்பகம் கல்லூரியின் ஆஸ்ட்ரானமி கிளப் கன்வீனர் பேராசிரியர் முனைவர் எஸ். இசக்கிமுத்து மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் இ. சிவசெந்தில் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்வில் தொலைநோக்கி மூலமாக வான்நோக்கு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. மேலும், விளக்கமும் வழங்கப்பட உள்ளது.
சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கும் இந்த அரிய நிகழ்வை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்று அறிவியல் இயக்கம் அன்போடு அழைக்கிறது. வியாழன் மற்றும் சனி கோள் நேர் கோட்டில் வருகிறதே தவிர இணைவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.
எனவே, கோள்கள் மோதுவதற்கும், அதனால் பெரும் விளைவுகள் ஏற்படுவதற்கும் எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. மக்களும் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் வரும் 21ம் தேதி திங்கள் கிழமை மாலை 6.30 மணி 7.30 மணி வரை வியாழன், சனி கோள்களை நேரடியாகக் காணலாம். கெரோனா காலம் என்பதால் முகக் கவசத்தோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு அவசியம். மேலும் தொடர்புக்கு:- 94866 54416
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் மெகபுனிஷா, மாநில வெளியீட்டு இணை ஒருங்கிணைப்பாளர் முஹமது பாதுஷா,மாநில வானியல் கருத்தாளர் ரமேஷ் மாவட்டத் தலைவர் ரிஷி சரவணன், மாவட்ட செயலாளர் ஶ்ரீராமகிருஷ்ணன் மற்றும் கோவை மண்டல அறிவியல் மைய மண்டல அறிவியல் அலுவலர் பழனிச்சாமி, கற்பகம் கல்லூரியின் ஆஸ்ட்ரானமி கிளப் கன்வீனர் பேராசிரியர் முனைவர் எஸ். இசக்கிமுத்து மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் இ. சிவசெந்தில் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்வில் தொலைநோக்கி மூலமாக வான்நோக்கு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. மேலும், விளக்கமும் வழங்கப்பட உள்ளது.
சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கும் இந்த அரிய நிகழ்வை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்று அறிவியல் இயக்கம் அன்போடு அழைக்கிறது. வியாழன் மற்றும் சனி கோள் நேர் கோட்டில் வருகிறதே தவிர இணைவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.
எனவே, கோள்கள் மோதுவதற்கும், அதனால் பெரும் விளைவுகள் ஏற்படுவதற்கும் எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. மக்களும் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் வரும் 21ம் தேதி திங்கள் கிழமை மாலை 6.30 மணி 7.30 மணி வரை வியாழன், சனி கோள்களை நேரடியாகக் காணலாம். கெரோனா காலம் என்பதால் முகக் கவசத்தோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு அவசியம். மேலும் தொடர்புக்கு:- 94866 54416