கோவை: கடந்த 13ம் தேதி, கோவை கூட்செட் சாலையில் செல்லும் அவினாசி ரோடு மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், இடதுபுறத்தில் திடீரென 3 அடி ஆழ பள்ளம் தோன்றியது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
கோவை: கடந்த 13ம் தேதி, கோவை கூட்செட் சாலையில் செல்லும் அவினாசி ரோடு மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில், இடதுபுறத்தில் திடீரென 3 அடி ஆழ பள்ளம் தோன்றியது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.

மந்த நிலையில் சீரமைக்கும் பணிகள்..!
இதனிடையே, ஒரு வாரம் முடிந்தும் பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன், காரணமாக கூட்செட் வழியாக நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, புரூக் பாண்ட் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மேம்பாலம் கீழ் பகுதி சர்வீஸ் சாலை வழியாக செல்ல முடியாமல், மேம்பாலத்தின் மேல் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
அவினாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
இதனால் அவினாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் உண்டாகுகிறது.
இதுபகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:‘‘அவினாசி மேம்பாலம் அருகே உள்ள சாலைகளின் வழியாக பாதாள சாக்கடை செல்கிறது. இதில், 600 மி.மீ அளவிலான பழைய பாதளா சாக்கடை குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்றி 40 மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.