கோவை: கோவையில் பாம்பு கடித்து விவசாயி மனைவி பரிதாபமாக இறந்தார். மதுக்கரையில் ஆடிட்டர் மாயமானார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை: கோவையில் பாம்பு கடித்து விவசாயி மனைவி பரிதாபமாக இறந்தார். மதுக்கரையில் ஆடிட்டர் மாயமானார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், புதுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது39). நேற்றுமுன்தினம் இவர்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுந்தராம்பாளின் வலது காலில் பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. இதனால் வலியால் துடித்த அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை வடக்கு காந்தி நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மரியா லிடியா மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆடிட்டரை தேடி வருகின்றனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், புதுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது39). நேற்றுமுன்தினம் இவர்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுந்தராம்பாளின் வலது காலில் பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. இதனால் வலியால் துடித்த அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை வடக்கு காந்தி நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மரியா லிடியா மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆடிட்டரை தேடி வருகின்றனர்.