பாம்பு கடித்து விவசாயி மனைவி சாவு; ஆடிட்டர் மாயம்!

கோவை: கோவையில் பாம்பு கடித்து விவசாயி மனைவி பரிதாபமாக இறந்தார். மதுக்கரையில் ஆடிட்டர் மாயமானார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை: கோவையில் பாம்பு கடித்து விவசாயி மனைவி பரிதாபமாக இறந்தார். மதுக்கரையில் ஆடிட்டர் மாயமானார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், புதுத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது39). நேற்றுமுன்தினம் இவர்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுந்தராம்பாளின் வலது காலில் பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. இதனால் வலியால் துடித்த அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை வடக்கு காந்தி நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மரியா லிடியா மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆடிட்டரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...