கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 15 இளைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 15 இளைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறுவகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாக வனச்சரகர் பழனிராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் நடத்திய இந்தச் சோதனையின்போது இருசக்கர வாகனங்களில் வந்த 15 இளைஞர்கள் தங்களது டூவீலரில் உதகைக்கு செல்லும் வழியில் உள்ள குன்னூர் சாலை வனப்பகுதிக்குள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்த னர். அங்கு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம் என இளைஞர்களைக் கடுமையாக எச்சரித்த வனச்சரகத்தினர் இளைஞர்கள் 15 பேருக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனச்சரகர் பழனிராஜா, `வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம். அதையும் மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள்மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கடுமையாக எச்சரித்தார். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறுவகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாக வனச்சரகர் பழனிராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் நடத்திய இந்தச் சோதனையின்போது இருசக்கர வாகனங்களில் வந்த 15 இளைஞர்கள் தங்களது டூவீலரில் உதகைக்கு செல்லும் வழியில் உள்ள குன்னூர் சாலை வனப்பகுதிக்குள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்த னர். அங்கு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம் என இளைஞர்களைக் கடுமையாக எச்சரித்த வனச்சரகத்தினர் இளைஞர்கள் 15 பேருக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனச்சரகர் பழனிராஜா, `வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம். அதையும் மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள்மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கடுமையாக எச்சரித்தார். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.