கோவையில் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில் நாதன் (40). இவரது மனைவி தீபா (28), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செந்தில்நாதன் வங்கியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் எடுத்ததாகத் தெரிகிறது. அதை தனது மனைவியிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து தீபாவிற்கு தெரியவந்ததும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் தீபா கோபித்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக செந்தில்நாதன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...