கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில் நாதன் (40). இவரது மனைவி தீபா (28), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செந்தில்நாதன் வங்கியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் எடுத்ததாகத் தெரிகிறது. அதை தனது மனைவியிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து தீபாவிற்கு தெரியவந்ததும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் தீபா கோபித்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக செந்தில்நாதன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில் நாதன் (40). இவரது மனைவி தீபா (28), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செந்தில்நாதன் வங்கியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் எடுத்ததாகத் தெரிகிறது. அதை தனது மனைவியிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து தீபாவிற்கு தெரியவந்ததும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் தீபா கோபித்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக செந்தில்நாதன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.