வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது!

கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.



இதையடுத்து, இன்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் குவிந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.



இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நூற்றுக்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...