வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது!

கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.



இதையடுத்து, இன்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் குவிந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.



இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நூற்றுக்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...