செல்போனால் உயிரிழந்த 9-ம் வகுப்பு மாணவி: கோவையில் பரிதாபம்!

கோவை: 9-ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பு முடிந்தபிறகும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டித்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: 9-ம் வகுப்பு மாணவி ஆன்லைன் வகுப்பு முடிந்தபிறகும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டித்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள குறிச்சி பாளையத்தை சேர்ந்த அன்புராஜ் மகள் பெல்சியா (வயது 14). இவர் சூலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை என்பதால் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். இதற்காக அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்திருந்தனர்.

ஆன்லைன் வகுப்புகள் முடிந்தபிறகும்கூட பெல்சியா தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்திருக்கிறார். இதை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த பெல்சியா நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் உடனடியாக போலீசார் விரைந்து சென்று பெல்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...