கோவை ஆட்சியரின் உத்தரவை மீறி ரேஷன் கடை பூட்டை உடைத்து அத்துமீறல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பழங்குடி மக்கள் வலியுறுத்தல்!

கோவை: ஆட்சியரின் உத்தரவை மீறி ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அத்துமீறிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: ஆட்சியரின் உத்தரவை மீறி ரேஷன் கடையின் பூட்டை உடைத்து அத்துமீறிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ஆனைக்கட்டி பகுதியில் 23 செட்டில்மெண்ட் பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் ரேஷன் பொருட்கள்பெற ஆலமரமேடுப் பகுதியிலும் ஆனைக்கட்டி செக் போஸ்ட் அருகிலும் இரண்டு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நியாய விலைக் கடைகள் மூலமாக சுமார் 6000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். இந்த இரு கடைகளையும் தட்சணா மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சின்ன ஜம்புகண்டி பெண்கள் குழுவினர் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடையின் பூட்டை உடைத்து ரேஷன் பொருட்களை அதிகாரிகள் வைத்துச் சென்றார்களாம்.



அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.

இதுகுறித்து சுய உதவி குழுவினர் கூறுகையில், `நியாயவிலைக்கடையை சொசைட்டியே எடுத்து நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் மகளிர் சுய உதவிக்குழுவினரே இதனை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் காசோலை பெறச் சென்ற நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டிருக்கின்றன. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது' என்றனர்.



ஆட்சியர் அளித்த அனுமதியை மதிக்காமல் நடந்து கொண்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி காவல்துறை கண்காணிப்பாளர், உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோருக்கு ஆதிவாசிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...