கோவை: பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியின் தூண்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியின் தூண்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி வட்டம் புளியம்பட்டி ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து, ஊராட்சியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது தொட்டியின் கீழ்புறம் மற்றும் தூண்கள் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பிகளும் துருப்பிடித்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "புளியம்பட்டி ஊராட்சி மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியின் தூண்கள் வலுவிழந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை விரைவில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வட்டம் புளியம்பட்டி ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து, ஊராட்சியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி மூலம், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே, மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது தொட்டியின் கீழ்புறம் மற்றும் தூண்கள் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பிகளும் துருப்பிடித்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "புளியம்பட்டி ஊராட்சி மக்களின் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியின் தூண்கள் வலுவிழந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை விரைவில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.