மணல் சிற்ப ஓவியப் போட்டி: தேசிய அளவில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு!

கோவை: மணல் சிற்ப ஓவிய போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

கோவை: மணல் சிற்ப ஓவிய போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

இணையவழியில் மாநில அளவில் 'கலா உத்சவ்' என்ற பெயரில் மணல் சிற்ப ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த 3 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான 'கலா உத்சவ்' போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்படாததால் இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவிலான போட்டி கடந்த 8-ஆம் தேதி முதல் 15 -ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பு மையத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 9 வகையான போட்டிகள் மாணவ, மாணவியருக்கு பிரத்தியேகமாக நடத்தப்பட்டன. இதில் மணல் சிற்பத்தில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கிருத்திகா முதலிடம் பிடித்தார். பாரம்பரிய நாட்டுப்புற வாய்ப்பாட்டு இசையில் மாணவர் பிரிவில் ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் யஷ்வந்த் மற்றும் கருவி இசை பிரிவில் ஒண்டிப்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி தனுஷ்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

இவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கலைப் போட்டிகளில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...