விஜயகாந்த் குறித்து அவதூறு: அ.தி.மு.க பிரமுகர் புகைப்படத்தை செருப்பால் அடித்து தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க பிரமுகர் புகைப்படத்தை செருப்பால் அடித்து தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.

கோவை: விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க பிரமுகர் புகைப்படத்தை செருப்பால் அடித்து தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.



அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் செல்வராஜ் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைக் காணவில்லை என்று விமர்சித்திருந்தார். இது தே.மு.தி.கவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.



 தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறித்து பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் செல்வராஜைக் கண்டித்து இன்று கோவை காந்திபார்க் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் செல்வராஜைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும், செல்வராஜின் புகைப்படங்களை மிதித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். 



இதைத்தொடர்ந்து தே.மு.தி.க கோவை மாவட்டச் செயலாளர் காட்டன் செந்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் இருக்கும் எந்த நபருக்கும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி பேச அருகதை இல்லை. தொலைக்காட்சி தரும் ஆயிரம் இரண்டாயிரத்துக்காக எங்களது தலைவர் பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. இதுபோன்று பேசுவதை கண்டிக்கத்தக்கது. சிறுவாணி நீரைத் திருடிப் பிழைத்த செல்வராஜ் இன்று மாலைக்குள் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்'என்றார்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...