ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உதவி காவல் ஆய்வாளர் ஜான்சன், அந்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு தலைமை காவலர் மூலம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன், ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக வெளியான ஆடியோ பதிவு தொடர்பான புகாரின் எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத்தொடர்பு தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த முகேஷ் என்பவரிடம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் பணம் பெற்றது காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்ததால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, தலைமை காவலர் நாகராஜன் மூலம் முகேஷை தொடர்புகொண்டு, பெற்ற பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நாகராஜன் வலியுறுத்துவதும், தனக்கு பணம் தேவையில்லை, வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்று முகேஷ் கூறுவதும் என இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக காவல்துறையின் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...