கோவை: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்ட நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்ட நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சய்பாபா ஊட்டி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், கோவை குடும்ப நீதிமன்ற நீதிபதி முருகேசன் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், ஊட்டி மாவட்ட நீதிபதி வடமலை மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், மதுரை 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி மதுசூதனன் தஞ்சை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், நாமக்கல் எஸ்.சி எஸ்.டி சிறப்பு கோர்ட் நீதிபதி தனசேகரன் நாமக்கல் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், தேனி கூடுதல் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டுக்கும், திருச்சி 2-வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி குணசேகரன் திருச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை முதலாவது கூடுதல் நீதிபதி செந்தில்குமார் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், சென்னை லேபர் கோர்ட் நீதிபதி வெங்கட வரதன் சென்னை ஐகோர்ட்டுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் நிரந்தர லோக் அதாலத் சேர்மன் ஸ்ரீதரன் ஊட்டி நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், சென்னை ஐகோர்ட் நீதிபதி சாந்தி நாமக்கல் நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், தேனி எஸ்.சி எஸ்.டி சிறப்பு கோர்ட் நீதிபதி கீதா சென்னை நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், புதுக்கோட்டை மூன்றாவது கூடுதல் செசன்ஸ் நீதிபதி தங்கவேல் திருச்சி 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டுக்கும், மதுரை நிரந்தர லோக் அதாலத் நீதிபதி கிருஷ்ண பாஸ்கரன் மதுரை மகளிர் கோர்ட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.