மாவட்ட நீதிபதிகள் 14 பேர் திடீர் இடமாற்றம்!

கோவை: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்ட நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.



கோவை: தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்ட நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சய்பாபா ஊட்டி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், கோவை குடும்ப நீதிமன்ற நீதிபதி முருகேசன் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், ஊட்டி மாவட்ட நீதிபதி வடமலை மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், மதுரை 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி மதுசூதனன் தஞ்சை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், நாமக்கல் எஸ்.சி எஸ்.டி சிறப்பு கோர்ட் நீதிபதி தனசேகரன் நாமக்கல் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், தேனி கூடுதல் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டுக்கும், திருச்சி 2-வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி குணசேகரன் திருச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை முதலாவது கூடுதல் நீதிபதி செந்தில்குமார் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டுக்கும், சென்னை லேபர் கோர்ட் நீதிபதி வெங்கட வரதன் சென்னை ஐகோர்ட்டுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் நிரந்தர லோக் அதாலத் சேர்மன் ஸ்ரீதரன் ஊட்டி நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், சென்னை ஐகோர்ட் நீதிபதி சாந்தி நாமக்கல் நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், தேனி எஸ்.சி எஸ்.டி சிறப்பு கோர்ட் நீதிபதி கீதா சென்னை நிரந்தர லோக் அதாலத் கோர்ட்டுக்கும், புதுக்கோட்டை மூன்றாவது கூடுதல் செசன்ஸ் நீதிபதி தங்கவேல் திருச்சி 2-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டுக்கும், மதுரை நிரந்தர லோக் அதாலத் நீதிபதி கிருஷ்ண பாஸ்கரன் மதுரை மகளிர் கோர்ட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...