கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு மழை ஓய்ந்த பின்னர், கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு மழை ஓய்ந்த பின்னர், கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது.
நேற்றைய நிலவரப்படி, காற்றின் ஈரப்பதம் 67 சதவீதமாக இருந்தது. வழக்கமான நாட்களில் ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம்தான் இருக்கும். ஆனால், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. மார்கழி, தை மாதம் வரை பனி மூட்டமும், கடுங்குளிரும் இருக்கும், என வேளாண் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
மார்கழி துவங்கும் முன்பே கடும் குளிர் வாட்டி வருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, வன மற்றும் மலை எல்லையோர கிராமங்களில் பனி மூட்டத்தால் 7 மணிக்குப் பிறகே விடியல் தெரிகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை இருக்கிறது.
குறிப்பாக மதுக்கரை, நீலாம்பூர் பைபாஸ், அவிநாசி ரோடு, துடியலூர் ஆகிய பகுதிகளில் பனிமூட்டத்தால் சாலை சரிவர தெரியாததால், பெரும்பாலான சரக்கு லாரிகள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.