கோவையில் மூன்று மடங்கு அதிகரித்த காற்றின் ஈரப்பதம்..! உச்சத்தை எட்டிய குளிர் மற்றும் பனி..!

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு மழை ஓய்ந்த பின்னர், கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு மழை ஓய்ந்த பின்னர், கடும் பனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது. 

நேற்றைய நிலவரப்படி, காற்றின் ஈரப்பதம்  67 சதவீதமாக இருந்தது. வழக்கமான நாட்களில் ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம்தான் இருக்கும். ஆனால், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. மார்கழி, தை மாதம் வரை பனி மூட்டமும், கடுங்குளிரும் இருக்கும், என வேளாண் வானிலைத் துறை தெரிவித்துள்ளது. 

மார்கழி துவங்கும் முன்பே கடும் குளிர் வாட்டி வருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, வன மற்றும் மலை எல்லையோர கிராமங்களில் பனி மூட்டத்தால் 7 மணிக்குப் பிறகே விடியல் தெரிகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்திருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கும் நிலை இருக்கிறது.

குறிப்பாக மதுக்கரை, நீலாம்பூர் பைபாஸ், அவிநாசி ரோடு, துடியலூர் ஆகிய பகுதிகளில் பனிமூட்டத்தால் சாலை சரிவர தெரியாததால், பெரும்பாலான சரக்கு லாரிகள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...