கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார்.
கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று 41 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கோவை வந்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான பன்வாரிலால் புரோகித் இன்று சென்னையில் இருந்து கோவை வருகை தந்தார். விமானம் மூலம் வருகை தந்த அவரை கோவை விமான நிலையத்தில் கோவை கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் கமிஷனர் சுமித் சரண், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து கார் மூலம் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை கல்யாணி மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு சாமி தரிசனம் செய்தார். பிறகு கோவிலில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினார். அதன் பின்னர் கார் மூலம் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செல்வபுரத்தை அடுத்த முத்துசாமி காலனி பஸ் நிறுத்தம் வந்தபோது அங்கு காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து காரிலிருந்து இறங்கிய கவர்னர் அங்கிருந்த பொதுமக்களிடம், `மாஸ் ஏன் அணியவில்லை, சமூக இடைவெளியை ஏன் பின்பற்றவில்லை, கொரோனா தடுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அவரது அறிவுரையை ஏற்று மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று 41 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கோவை வந்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான பன்வாரிலால் புரோகித் இன்று சென்னையில் இருந்து கோவை வருகை தந்தார். விமானம் மூலம் வருகை தந்த அவரை கோவை விமான நிலையத்தில் கோவை கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் கமிஷனர் சுமித் சரண், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து கார் மூலம் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை கல்யாணி மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு சாமி தரிசனம் செய்தார். பிறகு கோவிலில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினார். அதன் பின்னர் கார் மூலம் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செல்வபுரத்தை அடுத்த முத்துசாமி காலனி பஸ் நிறுத்தம் வந்தபோது அங்கு காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து காரிலிருந்து இறங்கிய கவர்னர் அங்கிருந்த பொதுமக்களிடம், `மாஸ் ஏன் அணியவில்லை, சமூக இடைவெளியை ஏன் பின்பற்றவில்லை, கொரோனா தடுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அவரது அறிவுரையை ஏற்று மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றார்.