பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்: முகக்கவசம் அணிய பொதுமக்களுக்கு அறிவுரை!

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக கவர்னர் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறினார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று 41 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கோவை வந்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான பன்வாரிலால் புரோகித் இன்று சென்னையில் இருந்து கோவை வருகை தந்தார். விமானம் மூலம் வருகை தந்த அவரை கோவை விமான நிலையத்தில் கோவை கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் கமிஷனர் சுமித் சரண், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து கார் மூலம் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் யானை கல்யாணி மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு சாமி தரிசனம் செய்தார். பிறகு கோவிலில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினார். அதன் பின்னர் கார் மூலம் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக செல்வபுரத்தை அடுத்த முத்துசாமி காலனி பஸ் நிறுத்தம் வந்தபோது அங்கு காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து காரிலிருந்து இறங்கிய கவர்னர் அங்கிருந்த பொதுமக்களிடம், `மாஸ் ஏன் அணியவில்லை, சமூக இடைவெளியை ஏன் பின்பற்றவில்லை, கொரோனா தடுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் அவரது அறிவுரையை ஏற்று மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...