கோவையில் சூலூர் அருகே அழுகிய நிலையில் கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்பு..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் அழுகிய நிலையில் கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அழுகிய நிலையில் கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சூலூர், பீடம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (65), கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி பாப்பாத்தி (60), இவர்களது மகள் கர்ப்பமாக உள்ளார். அவரை பார்த்துக் கொள்வதற்காக பாப்பாத்தி புலியகுளம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்முகம் புளியங்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால், அவர் பணம் தர மறுத்தார். இதனால் சண்முகம் கோபித்துக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றார்.

இந்த நிலையில், நேற்று பாப்பாத்தியின் வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி என்பவர் அவருக்கு போன் செய்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறினார். உடனே பாப்பாத்தி சண்முகத்திற்கு போன் செய்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்து உடனே வீடு திரும்பிய பாப்பாத்தி வீட்டினுள் சென்று பார்த்த போது, சண்முகம் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சூலூர் போலீசார் 174 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...