குன்னூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மூலம் இணையதள சேவை தொடக்கம்!

நீலகிரி: தமிழக அரசுக்கு சொந்தமாக குன்னூரில் செயல்பட்டு வரும் இன்கோசர்வ் நிறுவனத்தில் இ-காமர்ஸ் இணையதள சேவை இன்று துவங்கப்பட்டது.


நீலகிரி: தமிழக அரசுக்கு சொந்தமாக குன்னூரில் செயல்பட்டு வரும் இன்கோசர்வ் நிறுவனத்தில் இ-காமர்ஸ் இணையதள சேவை இன்று துவங்கப்பட்டது.

இந்தியாவில் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசர்வ் (கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை) நிறுவனம் கடந்த 55 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 30,000 சிறு குறு தேயிலை விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இண்ட்கோசர்வின் 16 தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக 5 தொழிற்சாலைகளை நவீன மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேயிலைத்தூள் ரகங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்குவதற்காக இ-காமர்ஸ் என்னும் இணையதள சேவையை தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் ஒரு ஆண்டிற்கு 13 மில்லியன் தேயிலைத்தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அரசு சார்பில் துவக்கப்பட்ட தேனீர் விற்பனையகத்தில் அனைத்து விதமான தேயிலை ரக தேனீர்களும் கிடைக்கும் எனவும் சந்தைப்படுத்துவதில் முக்கியத்துவம் தரப்பட்டு வருவதாகவும், நீலகிரி தேயிலைக்கென்று தனித்தன்மை சான்று பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இறுதியாக இந்த நிகழ்ச்சியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக இண்ட்கோசர்வ் நிறுவனம் சார்பில் 25 போக்குவரத்து தடுப்புகள் (பேரிகார்டு) காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...