திருப்பூர்: திருப்பூர் தில்லை நகர் பகுதியில் துணிகளை காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் தில்லை நகர் பகுதியில் துணிகளை காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருப்பூர் தில்லை நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (53). இவர்கள் வசிக்கும் வீடு உள்ள குடியிருப்பில் 50 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில், இன்று அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, வீட்டிலிருந்த துணிகளை துவைத்த முத்துலட்சுமி, துணிகளை கிணற்றின் அருகே காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்தார்.

அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிற்றின் மூலமாக கிணற்றுக்குள் இறங்கி, நீரில் தத்தளித்த பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட பெண் முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் தில்லை நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (53). இவர்கள் வசிக்கும் வீடு உள்ள குடியிருப்பில் 50 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில், இன்று அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, வீட்டிலிருந்த துணிகளை துவைத்த முத்துலட்சுமி, துணிகளை கிணற்றின் அருகே காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்தார்.
அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிற்றின் மூலமாக கிணற்றுக்குள் இறங்கி, நீரில் தத்தளித்த பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து மீட்கப்பட்ட பெண் முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.