திருப்பூர் அருகே துணிகளை காயப்போட முயன்ற போது கிணற்றில் தவறி விழுந்த பெண்; தீயணைப்புத் துறையினர் மூலம் பத்திரமாக மீட்பு!

திருப்பூர்: திருப்பூர் தில்லை நகர் பகுதியில் துணிகளை காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் தில்லை நகர் பகுதியில் துணிகளை காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் தில்லை நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (53). இவர்கள் வசிக்கும் வீடு உள்ள குடியிருப்பில் 50 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில், இன்று அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, வீட்டிலிருந்த துணிகளை துவைத்த முத்துலட்சுமி, துணிகளை கிணற்றின் அருகே காயப்போட முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்தார்.



அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிற்றின் மூலமாக கிணற்றுக்குள் இறங்கி, நீரில் தத்தளித்த பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட பெண் முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...