ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சினை தீர்க்கக் கோரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்!

பொள்ளாச்சி: பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.

பொள்ளாச்சி: பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.



பி.எஸ்.என்.எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் சம்பள கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் உடுமலை கிளைச் செயலாளர் எஸ்.சிக்கந்தர்பாட்சா பேசினார். 

போராட்டத்தின்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் குறித்து கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும், சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். 

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...