பொள்ளாச்சி: பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.
பொள்ளாச்சி: பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் சம்பள கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் உடுமலை கிளைச் செயலாளர் எஸ்.சிக்கந்தர்பாட்சா பேசினார்.
போராட்டத்தின்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் குறித்து கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும், சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்களின் சம்பள கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்படுவதைக் கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் உடுமலை கிளைச் செயலாளர் எஸ்.சிக்கந்தர்பாட்சா பேசினார்.
போராட்டத்தின்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளக் கோரிக்கைகள் குறித்து கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதைக் கண்டித்தும், சம்பளப் பேச்சுவார்த்தை முடிவுகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்பட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.