கோவை: சூதாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோவை: சூதாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 62, 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர அங்கு பதுக்கி வைத்திருந்த 650 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவம் நடந்த பகுதி கோமங்கலம் போலீஸ் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே இதுதொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத கோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனை, கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.
பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 62, 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர அங்கு பதுக்கி வைத்திருந்த 650 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவம் நடந்த பகுதி கோமங்கலம் போலீஸ் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே இதுதொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத கோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனை, கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார்.