3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண் கைது!

கோவை: சூலூர் அருகே 3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை: சூலூர் அருகே 3 வயது குழந்தையை கட்டையால் தாக்கிய பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டினம்புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது 3 வயது குழந்தை நேற்று அருகிலுள்ள பூங்காவனம் என்பவரது வீட்டுக் காம்பவுண்டுக்குள் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பூங்காவனம் குழந்தையை வெளியே போய் விளையாடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்தக் குழந்தை வெளியே போகாமல் அடம் பிடித்து தொடர்ந்து அங்கேயே விளையாடிக்கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பூங்காவனம் அருகே இருந்த கட்டையை எடுத்து குழந்தையைத் தாக்கியுள்ளார். இதில் குழந்தை வலி தாங்காமல் கதறி அழுதது.

குழந்தையின் சத்தம் கேட்டு அவரது தந்தை சுரேஷ்குமார் மற்றும் அருகே இருந்தவர்கள் ஓடிச் சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டுப் பெண் கட்டையால் தாக்கியது தெரியவந்தது. 

இதுகுறித்து அந்தப் பெண் மற்றும் வீட்டாரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சுரேஷ்குமார் சூலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பூங்காவனத்தை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...