கோவை: ரயில் பயணத்தின்போது கோர்ட் பெண் ஊழியரின் செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.
கோவை: ரயில் பயணத்தின்போது கோர்ட் பெண் ஊழியரின் செல்போன், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருள்களை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.
ஊட்டியில் உள்ள அமீனா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி சுஜாதா (வயது 43). கோர்ட் ஊழியரான இவர் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதிகாலை 4.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வடகோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது சுஜாதா கழிவறைக்குச் சென்று விட்டு வந்து உறங்கிவிட்டார்.
பிறகு ரயில் மேட்டுப்பாளையத்துக்கு புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சுஜாதா எழுந்து பார்த்தபோது படுக்கையில் வைத்திருந்த பேக் மற்றும் அதன் உள்ளே இருந்த செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, அலுவலக அடையாள அட்டை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டியில் உள்ள அமீனா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி சுஜாதா (வயது 43). கோர்ட் ஊழியரான இவர் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அதிகாலை 4.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வடகோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது சுஜாதா கழிவறைக்குச் சென்று விட்டு வந்து உறங்கிவிட்டார்.
பிறகு ரயில் மேட்டுப்பாளையத்துக்கு புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சுஜாதா எழுந்து பார்த்தபோது படுக்கையில் வைத்திருந்த பேக் மற்றும் அதன் உள்ளே இருந்த செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, அலுவலக அடையாள அட்டை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.