தெருவில் மோட்டார் சைக்கிள் ரேஸ்: தட்டிக்கேட்ட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது!

கோவை: தெருவில் மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டியபடி ரேஸில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: தெருவில் மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டியபடி ரேஸில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சூலூர் தெற்கு தேர் வீதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 22), தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ரேஸில் ஈடுபட்டனர். அப்போது தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மகேஸ்வரன் அந்த வாலிபர்களைத் தடுத்து நிறுத்தி `ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள், குழந்தைகள்மீது பட்டால் என்ன ஆவது?' என்றார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மகேஸ்வரனை தகாத வார்த்தைகளில் திட்டி சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்ப போயர் வீதியைச் சேர்ந்த கார்த்திக், புவியரசன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது நண்பர் விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...