கோவை: தெருவில் மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டியபடி ரேஸில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: தெருவில் மோட்டார் சைக்கிளை அதிக வேகமாக ஓட்டியபடி ரேஸில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சூலூர் தெற்கு தேர் வீதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 22), தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ரேஸில் ஈடுபட்டனர். அப்போது தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மகேஸ்வரன் அந்த வாலிபர்களைத் தடுத்து நிறுத்தி `ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள், குழந்தைகள்மீது பட்டால் என்ன ஆவது?' என்றார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மகேஸ்வரனை தகாத வார்த்தைகளில் திட்டி சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்ப போயர் வீதியைச் சேர்ந்த கார்த்திக், புவியரசன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது நண்பர் விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் தெற்கு தேர் வீதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 22), தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு ரேஸில் ஈடுபட்டனர். அப்போது தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மகேஸ்வரன் அந்த வாலிபர்களைத் தடுத்து நிறுத்தி `ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள், குழந்தைகள்மீது பட்டால் என்ன ஆவது?' என்றார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மகேஸ்வரனை தகாத வார்த்தைகளில் திட்டி சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்ப போயர் வீதியைச் சேர்ந்த கார்த்திக், புவியரசன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது நண்பர் விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.