வேலை கிடைக்காத விரக்தி: ஏ.சி மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை!

கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் கோவை மாசகளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ரஞ்சித்குமாருக்கு பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதனால் தற்போது பார்க்கும் வேலையில் ரஞ்சித்குமார் விருப்பமில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அவர் வேலைபார்த்த நிறுவனத்திலேயே ரஞ்சித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...