கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஏ.சி மெக்கானிக் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் கோவை மாசகளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ரஞ்சித்குமாருக்கு பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதனால் தற்போது பார்க்கும் வேலையில் ரஞ்சித்குமார் விருப்பமில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அவர் வேலைபார்த்த நிறுவனத்திலேயே ரஞ்சித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் கோவை மாசகளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ரஞ்சித்குமாருக்கு பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதனால் தற்போது பார்க்கும் வேலையில் ரஞ்சித்குமார் விருப்பமில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அவர் வேலைபார்த்த நிறுவனத்திலேயே ரஞ்சித்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.