வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் துணை குடியரசுத் தலைவருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது!

கோவை: வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாளை நடைபெறும் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வந்தடைந்தார்.

இதனிடையே, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்ல இருந்த நிலையில், வேளாண் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக தகவல் கிடைத்தது.



இதனை தொடர்ந்து, அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், இடைவெளியில் கருப்பு கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 15 பேரையும் போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.



மேலும், அவினாசி நோக்கிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. மேலும், இப்பகுதியில் குடியரசு துணைத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டவும், மறியலில் ஈடுபடவும் யாரேனும் பதுங்கி உள்ளனரா என சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...