வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் துணை குடியரசுத் தலைவருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது!

கோவை: வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாளை நடைபெறும் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வந்தடைந்தார்.

இதனிடையே, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்ல இருந்த நிலையில், வேளாண் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக தகவல் கிடைத்தது.



இதனை தொடர்ந்து, அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், இடைவெளியில் கருப்பு கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 15 பேரையும் போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.



மேலும், அவினாசி நோக்கிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. மேலும், இப்பகுதியில் குடியரசு துணைத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டவும், மறியலில் ஈடுபடவும் யாரேனும் பதுங்கி உள்ளனரா என சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...