25 கிலோ தங்கக் கட்டிகளுடன் நகை மொத்த விற்பனையாளர் மாயம்? போலீஸ் விசாரணை!

கோவை: 25 கிலோ தங்கக் கட்டிகளுடன் நகைப் பட்டறை உரிமையாளர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: 25 கிலோ தங்கக் கட்டிகளுடன் நகைப் மொத்தவிற்பனை உரிமையாளர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் தங்கக் கட்டிகளை ஆர்டரின்பேரில் எடுத்து நகை வடிவமைத்துக் கொடுக்கும் பட்டறைகளுடன் தொழில் செய்யும் மொத்த விற்பனையாளர் ஒருவர் மாயமாகிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை செல்வபுரம் அசோக் நகரைச் சேர்ந்த தங்க நகைப் பட்டறை உரிமையாளர் ஒருவர் நகரில் பல்வேறு நகைக்கடைகளில் தங்கக் கட்டிகளை ஆர்டரின் பேரில் வாங்கி ப்ங்கட்டறைகளுடன் வேலை செய்து  நகைகளாக வடிவமைத்துக் கொடுத்து வந்தார். 

இவர் நகரில் 15-க்கும் மேற்பட்ட நகைக்கடை நிர்வாகத்தினரிடம் இருந்து 25 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளை வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தங்கக் கட்டிகளுடன் அவர் மாயமாகிவிட்டார். அவர் இதுவரை தங்கக் கட்டிகளையும் தரவில்லை. ஆபரணமாக வடிவமைத்தும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அவர் மொத்த தங்க நகைகளையும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்வபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிக எடை கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் ஒரு நபரிடம் மொத்தமாக ஒப்படைத்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. மாயமான தங்க நகை விற்கும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், இந்த புகார் தொடர்பாக போலீசார் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

கடந்த ஆண்டில் கோவை நகரில் இதேபோல பல லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கக் கட்டிகளுடன் ஒருவர் மாயமானார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் தங்கக் கட்டியை கடத்தியதாக கூறப்பட்ட நபர் சிக்கினார். இதைத்தொடர்ந்து புகார் அளித்தவர்கள் தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். வழக்குபதிவு செய்யாமலே கடத்தல் புகார் முடிவுக்கு வந்தது. தற்போதும் இதேபோல் புகார் வந்திருக்கிறது.

தங்கக்கட்டி நகை தயாரிப்பு தொழில் என்பது நம்பிக்கை அடிப்படையில் நடக்கக்கூடியது. முறையான ஆதாரம் மற்றும் ஆவணங்களுடன் தங்கக்கட்டிகள் நகைகள் கையாளப்படுவதில்லை. வருமான வரி விவகாரம் காரணமாக ஆவணங்களை பலரும் பின்பற்றுவதில்லை எனத் தெரிகிறது. நம்பிக்கை மோசடியாக ஒருவர் தங்கக்கட்டிகள் கடத்திச் சென்றால். அவரைப் பிடித்து தங்கத்தை மீட்க போலீசார் அவரை அணுகுவது வாடிக்கையாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் தங்கக் கட்டியை கடத்திச் சென்ற வடமாநில வாலிபரைப் பிடிக்க தங்கநகை உரிமையாளர்கள் கோவை போலீசை அணுகினர். போலீசாரை விமானத்தில் அனுப்பி வைத்து கடத்திச் சென்றவரை ஒரே நாளில் மடக்கிப்பிடித்தனர். தற்போது வந்துள்ள தங்கக்கட்டி கடத்தல் புகார் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, `புகார் உண்மையானதா என விசாரிக்கிறோம். சரியாக இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...